Monday, 13th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரியில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ஓ.சௌதாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கல்லூரி தலைவர் க.சிதம்பரம் துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ம.செந்தில்ராஜா வரவேற்புரை நிகழ்த்தினார்.
உலக மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் அவற்றின் விளைவுகள் பற்றி ஓ.சௌதாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் கனிமொழி, நந்தினி ஆகியோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த முகாமிற்கு மருத்துவ அலுவலர்கள் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆகியோர் ஓ.சௌதாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து வருகை புரிந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து அனைவரும் சுகாதார உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இறுதியாக மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவுரைப்படி போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது.